sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ரூ.525 கோடியில் பன்னாட்டு அரங்கம் இந்தாண்டு இறுதியில் முடியும்: அமைச்சர் வேலு

/

ரூ.525 கோடியில் பன்னாட்டு அரங்கம் இந்தாண்டு இறுதியில் முடியும்: அமைச்சர் வேலு

ரூ.525 கோடியில் பன்னாட்டு அரங்கம் இந்தாண்டு இறுதியில் முடியும்: அமைச்சர் வேலு

ரூ.525 கோடியில் பன்னாட்டு அரங்கம் இந்தாண்டு இறுதியில் முடியும்: அமைச்சர் வேலு


ADDED : ஏப் 28, 2025 03:21 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 03:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:''முட்டுக்காடில், 525 கோடி ரூபாயில் அமைக்கப்படும் பன்னாட்டு அரங்கம், 2025 இறுதிக்குள் முடிக்கப்படும்,'' என, அமைச்சர் வேலு தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை தொடர்ந்து, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியில், 525 கோடி ரூபாயில், கருணாநிதி பெயரிலான பன்னாட்டு அரங்கம் அமைக்கும் பணி துவங்கியுள்ளது.

இதில், 5,000 இருக்கைகள் கொண்ட மாநாட்டுக் கூடம், 10,000 பேர் பார்வையிடும் வசதி கொண்ட கண்காட்சி அரங்கம், கூட்ட அரங்கம் ஆகியவை அமைய உள்ளன.

திறந்தவெளி அரங்கம், உணவு விடுதிகள், வாகன நிறுத்தம், நுழைவு வாயில் என, அனைத்து வசதிகளும் அமைக்கப்பட உள்ளது.

இந்நிலையில், தற்போதைய பணிகளின் நிலை, கூடுதலாக மேற்கொள்ளப்பட்ட வேண்டிய பணிகள் குறித்து, பொதுப்பணித் துறை அமைச்சர் வேலு, நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது, 'பன்னாட்ட அரங்க பணிகளளை, 2025ம் ஆண்டு இறுதி அல்லது 2026 தொடக்கத்திற்குள் முடிக்கும் வகையில், பணிகளை விரைவுபடுத்த வேண்டும்' என, அமைச்சர் வேலு, அதிகாரிளுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது, பொதுப்பணித் துறை கூடுதல் தலைமை செயலர் மங்கத் ராம் சர்மா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us