/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அங்கன்வாடி பணியாளர் பணிக்கு நேர்காணல்
/
அங்கன்வாடி பணியாளர் பணிக்கு நேர்காணல்
ADDED : ஜூன் 06, 2025 01:55 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், அங்கன்வாடி பணியாளர் பணிக்கான நேர்காணல், நேற்று நடந்தது.
அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் செயல்பட்டு வந்தது.
இதில், 8 பணியாளர்கள் உள்ளனர்.
அதில், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்டு 149 மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
மொத்தமுள்ள 149 மையங்களில், 8 பணியாளர் பதவிகள் மற்றும் 24 அங்கன்வாடி மைய உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
அதற்காக, குழந்தை வளர்ச்சி திட்ட அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள், இப்பணிகளுக்காக விண்ணப்பித்தவர்களிடம் நேர்காணல் நடத்தினர்.
இதில், அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில், இப்பணிகளுக்காக விண்ணப்பித்த 200க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.