/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இருளர் தொகுப்பு வீடு பணிகள் ஆட்சிவிளாகத்தில் மீண்டும் துவக்கம்
/
இருளர் தொகுப்பு வீடு பணிகள் ஆட்சிவிளாகத்தில் மீண்டும் துவக்கம்
இருளர் தொகுப்பு வீடு பணிகள் ஆட்சிவிளாகத்தில் மீண்டும் துவக்கம்
இருளர் தொகுப்பு வீடு பணிகள் ஆட்சிவிளாகத்தில் மீண்டும் துவக்கம்
ADDED : ஜன 22, 2025 12:12 AM

செய்யூர்,
நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, ஆட்சிவிளாகம் கிராமத்தில் இருளர் இன மக்களுக்கான வீடுகள் கட்டும் பணி மீண்டும் துவங்கி உள்ளது
செய்யூர் சுற்றுவட்டார பகுதிகளான நெடுமரம், பாக்கூர், கொடூர், மடையம்பாக்கம் போன்ற கிராமங்களில், 40க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் சொந்தமாக வீடு இல்லாமல், நீர்நிலை புறம்போக்கு மற்றும் மேய்க்கால் புறம்போக்கு இடத்தில் அடிப்படை வசதியின்றி வசித்து வருகின்றனர்.
சொந்த வீடு மற்றும் வீட்டுமனை வேண்டி, பல ஆண்டுகளாக, இருளர் மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், கொடூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆட்சிவிளாகம் கிராமத்தில், 33 இருளர் குடும்பத்தினருக்கு பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்ட, அரசு சார்பாக இடம் தேர்வு செய்யப்பட்டது.
கடந்த 2023 பிப்., 23ம் தேதி பூமி பூஜை போடப்பட்டு, கட்டுமான பணிகள் துவங்கப்பட்டன.
அடித்தளம் அமைக்கும் பணிகள் நடந்து வந்த நிலையில், கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டு, ஓராண்டாக கிடப்பில் போடப்பட்டு இருந்தது.
வீடு கட்டும் பணி முடிக்கப்படாமல் உள்ளதால், அடிப்படை வசதி இல்லாமல் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் கடும் அவதிப்படுகின்றனர்.
இதுகுறிதது நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து தற்போது, கட்டுமான பணிகள் மீண்டும் துவங்கப்பட்டு, வேகமாக நடைபெற்று வருகிறது.