sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

இருளர் மக்களுக்கு வீடு கட்ட பணி ஆணை வழங்கல்

/

இருளர் மக்களுக்கு வீடு கட்ட பணி ஆணை வழங்கல்

இருளர் மக்களுக்கு வீடு கட்ட பணி ஆணை வழங்கல்

இருளர் மக்களுக்கு வீடு கட்ட பணி ஆணை வழங்கல்


UPDATED : மே 14, 2025 01:06 AM

ADDED : மே 14, 2025 12:49 AM

Google News

UPDATED : மே 14, 2025 01:06 AM ADDED : மே 14, 2025 12:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமுக்காடு ஊராட்சியிலுள்ள இருளர் மக்களுக்கு, கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கான அனுமதி கடிதம் வழங்கப்பட்டது.

திருமுக்காடு ஊராட்சி பகுதியில், 25க்கும் மேற்பட்ட இருளர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு நிரந்தர வீடு இல்லாத நிலையில் விவசாயம் மற்றும் கூலி வேலைகளுக்கு பல்வேறு கிராமப் பகுதிகளுக்குச் சென்று, அங்கேயே தங்கி வேலை செய்து வந்தனர். ஓலை குடிசை வீடுகளில் வசித்து வந்தனர்.

இவர்கள் வெயில் மற்றும் மழைக் காலங்களில், தங்களின் உடைமைகளை பாதுகாக்கும் வகையிலும், நிரந்தரமாக ஒரே கிராமத்தில் வசிக்கும் வகையிலும், மத்திய அரசு சார்பில், 'ஜன்மன்' திட்டம் 2024--25ம் நிதியாண்டில், அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில், 37 இருளர் குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அதில், திருமுக்காடு ஊராட்சி பகுதியைச் சேர்ந்த 16 இருளர் குடும்பங்களுக்கு, தலா 5.7 லட்சம் ரூபாய் மதிப்பில், கான்கிரீட் வீடுகள் கட்ட, பயனாளிகளுக்கு அனுமதி கடிதம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகலைச்செல்வன், திருமுக்காடு ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள், ஊராட்சி செயலர் சுபாஷ் மற்றும் பயனாளிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us