sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஓராண்டாக முடங்கிய 'பார்க்கிங்' ஏலம் வரும் 27ம் தேதி நடப்பதாக அறிவிப்பு

/

ஓராண்டாக முடங்கிய 'பார்க்கிங்' ஏலம் வரும் 27ம் தேதி நடப்பதாக அறிவிப்பு

ஓராண்டாக முடங்கிய 'பார்க்கிங்' ஏலம் வரும் 27ம் தேதி நடப்பதாக அறிவிப்பு

ஓராண்டாக முடங்கிய 'பார்க்கிங்' ஏலம் வரும் 27ம் தேதி நடப்பதாக அறிவிப்பு


ADDED : செப் 21, 2024 09:46 PM

Google News

ADDED : செப் 21, 2024 09:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சதுரங்கப்பட்டினம்:சதுரங்கப்பட்டினம் ஊராட்சியில் சர்ச்சைகளால் ஓராண்டாக முடங்கியிருந்த வாகன நிறுத்துமிட ஏலத்தை, வரும் 27ம் தேதி நடத்துவதாக, ஊராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

கல்பாக்கம் அணுசக்தி தொழில் வளாகம் அருகே, சதுரங்கப்பட்டினம் ஊராட்சி உள்ளது. அணுசக்தி வளாக நுழைவாயில் பகுதியில், ஊராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது.

கல்பாக்கம் பணிகளில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த நிறுவனங்களின் தொழிலாளர்கள், அவர்களின் இருசக்கர வாகனங்களை, ஊராட்சி இடத்தில் நிறுத்தி, அணுசக்தி வளாகம் செல்கின்றனர். கார், கனரக வாகனங்களும் நிறுத்தப்படுகின்றன.

வாகன பாதுகாப்பு, ஊராட்சி நிர்வாக வருவாய் கருதி, அங்கு கட்டண வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்த, ஊராட்சி நிர்வாகம் 2022ல் முயற்சி செய்தது.

தினமும் தலா 10 ரூபாய், மாத கட்டணம் 200 ரூபாய் என நிர்ணயித்து, ஊராட்சி நிர்வாகமே நடத்த, ஊரக வளர்ச்சித் துறையிடம் அனுமதியும் பெற்றது.

இந்நிலையில், ஊராட்சி தலைவர் ரேவதியின் கணவரான, அ.தி.மு.க., பிரமுகர் சாமிநாதனுக்கும், தி.மு.க.,வைச் சேர்ந்த ஒன்றியக்குழு பிரதிநிதிக்கும் விரோதம் இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே, கட்டண வசூலுக்கு, தி.மு.க., பிரமுகர் முட்டுக்கட்டையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, ஊராட்சி நிர்வாகம், கட்டணம் வசூலிக்கும் குத்தகையை, பொது ஏலத்தில் தனியாரிடம் அளிக்க, மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற்றது.

கடந்தாண்டு அக்., 4ம் தேதி பொது ஏலம் நடத்தியது. தி.மு.க., பிரமுகர் சார்பில் 20 பேர், பிறர் 10 பேர் என, ஏலத்தில் பங்கேற்க பதிந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், யாருமே ஏலம் எடுக்காததால் ஒத்திவைக்கப்பட்டது. தி.மு.க., பிரமுகரின் முட்டுக்கட்டையால், அதிகாரிகளும் ஏலம் நடத்த ஒத்துழைக்காததாக கூறப்பட்டது.

இதுதொடர்பாக, ஊராட்சி தலைவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, வரும் 27ம் தேதி பொது ஏலம் நடத்துவதாக, ஊராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us