sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மீன்வலை பாதுகாப்பு கூடம் அமைக்க கடப்பாக்கம் மீனவர்கள் எதிர்பார்ப்பு

/

மீன்வலை பாதுகாப்பு கூடம் அமைக்க கடப்பாக்கம் மீனவர்கள் எதிர்பார்ப்பு

மீன்வலை பாதுகாப்பு கூடம் அமைக்க கடப்பாக்கம் மீனவர்கள் எதிர்பார்ப்பு

மீன்வலை பாதுகாப்பு கூடம் அமைக்க கடப்பாக்கம் மீனவர்கள் எதிர்பார்ப்பு


ADDED : பிப் 04, 2024 05:48 AM

Google News

ADDED : பிப் 04, 2024 05:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்: செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கம் பகுதியில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

கடலில் விசைப்படகு மூலம் மீன்பிடித்து விற்பனை செய்வதே இங்குள்ள மக்களின் பிரதான தொழிலாக உள்ளது.

இப்பகுதியில் மீன்வலை பாதுகாப்பு கூடம் இல்லாததால், மீனவர்கள் தங்களது மீன்பிடி வலை மற்றும் உபகரணங்களை கடலோரத்தில் வைத்து வருகின்றனர்.

இதனால், வெயிலிலும், மழையிலும் நனைந்து மீன் வலைகள் விரைவில் சேதமடைவதால், மீனவ மக்களுக்கு அதிகளவில் நஷ்டம் ஏற்படுகிறது.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, இந்த பகுதியில் மீன்வலை பாதுகாப்பு கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து இடைக்கழிநாடு பேரூராட்சி 13வது வார்டு கவுன்சிலர் தெய்வானை கூறியதாவது:

கடப்பாக்கம் பகுதியில் மீன்வலை பாதுகாப்பு கூடம் இல்லாததால், மீனவர்கள் வலைகளை திறந்த வெளியில் வைத்து வருகின்றனர். இதனால், மீன்வலை மக்கி அடிக்கடி சேதமடைகிறது.

கடந்த சில நாட்களில் மட்டும் கடலோரத்தில் வைக்கப்பட்டு இருந்த, 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன் வலைகளை மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்தினர்.

எனவே, மீனவர்களின் நலன் கருதி, அதிகாரிகள் மீன்வலை பாதுகாப்பு கூடம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us