/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிடப்பில் சாலைப்பணி கடப்பாக்கம் மக்கள் அவதி
/
கிடப்பில் சாலைப்பணி கடப்பாக்கம் மக்கள் அவதி
ADDED : ஜூன் 16, 2025 11:49 PM

செய்யூர், கடப்பாக்கம் பகுதியில் சேதமான சாலையை சீரமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டதால், அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேருராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. பேருராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 25,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கம் பகுதியில் தேர்பாட்டை சாலை சேதமடைந்துள்ளதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், இடைக்கழிநாடு பேரூராட்சி டார்மன்ட் நிதியின் கீழ் 200 மீட்டர் நீளத்திற்கு தேர்பாட்டை சாலையை சீரமைக்க கடந்த ஆண்டு டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கப்பட்டன.
இந்நிலையில் ஜல்லிகள் கொட்டி நிரவப்பட்ட நிலையில் ஏழு மாதங்ளுக்கு முன் சாலை சீரமைக்கும் பணி திடீரென நிறுத்தப்பட்டது. தற்போது வரை புதிய சாலை அமைக்கப்படாமல் உள்ளதால், சாலையில் செல்லும் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
துறை சார்ந்த அதிகாரிகள் சாலைப் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என. பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.