sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 கார்த்திகை தீப பணிகள் திருக்கச்சூரில் தீவிரம்

/

 கார்த்திகை தீப பணிகள் திருக்கச்சூரில் தீவிரம்

 கார்த்திகை தீப பணிகள் திருக்கச்சூரில் தீவிரம்

 கார்த்திகை தீப பணிகள் திருக்கச்சூரில் தீவிரம்


ADDED : டிச 03, 2025 06:14 AM

Google News

ADDED : டிச 03, 2025 06:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்: திருக்கச்சூர் மருந்தீஸ்வரர் கோவில் மலை மீது, கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

சிங்கபெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூரில், பழமையான மருந்தீஸ்வரர் - இருள் நீக்கி தாயார் கோவில் உள்ளது. இக்கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப் பாட்டில் உள்ளது.

இக்கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, அன்று மாலை மலை மீது, 111 லிட்டர் கொள்ளளவு கொண்ட கொப்பரையில், தீபம் ஏற்றப்படும்.

அந்த வகையில், இன்று தீபம் ஏற்றுவதற்கான பணிகள், தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மஹா தீபத்திற்குத் தேவையான 3,500 மீட்டர் நீளமுடைய திரி தயாரிக்கும் பணிகளில், சிவனடியார்கள் ஈடுபட்டு உள்ளனர்.

பக்தர்கள் சார்பில் மூன்று நாட்கள் விளக்கேற்ற, 600 லிட்டர் எண்ணெய் வழங்கப்பட்டுள்ளது.

கார்த்திகை தீபத்திற்கு, சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் மற்றும் சென்னை, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவர்.

அவர்களின் வசதிக்காக மறைமலை நகர் நகராட்சி சார்பில் குடிநீர், வாகன நிறுத்துமிடம், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

இன்று மாலை 6:00 மணிக்கு, மலை மீது தீபம் ஏற்றப்படுகிறது.






      Dinamalar
      Follow us