/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை மல்லிகேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக மண்டலாபிஷேக நிறைவு
/
மாமல்லை மல்லிகேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக மண்டலாபிஷேக நிறைவு
மாமல்லை மல்லிகேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக மண்டலாபிஷேக நிறைவு
மாமல்லை மல்லிகேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக மண்டலாபிஷேக நிறைவு
ADDED : நவ 03, 2024 12:26 AM

மாமல்லபுரம்:மாமல்லபுரம், மல்லிகேஸ்வரர் கோவிலில், மஹா கும்பாபிஷேக மண்டலாபிஷேக நிறைவு உற்சவம், 108 சங்காபிஷேகத்துடன் நடந்தது.
மாமல்லபுரத்தில், பல நுாற்றாண்டுகள் பழமைவாய்ந்த மல்லிகேஸ்வரி உடனுறை மல்லிகேஸ்வரர் கோவில் பிரசித்திபெற்றது. ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இக்கோவில் உள்ளது. துறையின் ஆளவந்தார் அறக்கட்டளை, கோவிலை நிர்வகிக்கிறது.
இக்கோவில் 20 ஆண்டுகளுக்கு முன், வழிபாடற்ற சீரழிந்த நிலையில் இருந்தது. இப்பகுதி பக்தர்கள், கோவிலை புனரமைத்து, 2004, 2017 ஆகிய ஆண்டுகளில் மஹா கும்பாபிேஷகம் நடத்தினர்.
இந்நிலையில், நுழைவாயிலில் ராஜகோபுரம் அமைத்தும், பிற திருப்பணிகள் செய்தும், கடந்த செப்., 15ம் தேதி, மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, தினசரி மண்டலாபிஷேகமாக, நேற்று வரை 48 நாட்கள் நடந்தது.
நேற்று நிறைவுநாள் உற்சவம் நடந்தது.
இதை முன்னிட்டு, கணபதி ேஹாமம் நிகழ்த்தி, 108 சங்குகளில் புனிதநீர் நிரப்பி, சிவபெருமான் மற்றும் பிற சுவாமியருக்கு அபிஷேகம் செய்து, தீபாராதனை வழிபாடு நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இரவு சுவாமி வீதியுலா சென்றார்.
இக்கோவிலில் வீற்றுள்ள முருகருக்கு, கந்தசஷ்டி உற்சவமும் நேற்று துவக்கப்பட்டது. வரும் 7ம் தேதி வரை, தினசரி உற்சவம் நடக்கிறது.