/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செய்யூர் தாசில்தார் அலுவலகத்தில் குடிநீர் வசதியின்றி தவிப்பு
/
செய்யூர் தாசில்தார் அலுவலகத்தில் குடிநீர் வசதியின்றி தவிப்பு
செய்யூர் தாசில்தார் அலுவலகத்தில் குடிநீர் வசதியின்றி தவிப்பு
செய்யூர் தாசில்தார் அலுவலகத்தில் குடிநீர் வசதியின்றி தவிப்பு
ADDED : அக் 31, 2025 10:20 PM
செய்யூர்: செய்யூர் தாசில்தார் அலுவலகத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செய்யூர் பஜார் வீதியில், தாசில்தார் அலுவலகம் உள்ளது.
தினமும் பொதுமக்கள் குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், ஆதார் அட்டை விண்ணப்பித்தல், ஓய்வூதியம் பெற விண்ணப்பித்தல், பட்டா பெயர் மாற்றம், நில அளவைக்கு பதிவு செய்தல் என, பல்வேறு வேலைக்காக வந்து செல்கின்றனர்.
பல ஆண்டுகளாக, தாசில்தார் அலுவலக வளாகத்தில் குடிநீர் வசதி இல்லாததால், அலுவலகத்திற்கு வரும் குழந்தைகள், பெண்கள், முதியோர் மற்றும் அரசு ஊழியர்கள் சிரமப்படுகின்றனர்.
மேலும், பகல் நேரத்தில் வெப்ப தாக்கத்தால் தண்ணீர் இல்லாமல், கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, செய்யூர் தாசில்தார் அலுவலக வளாகத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

