/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குறைந்த மின்னழுத்தம் மாம்பாக்கத்தில் அவதி
/
குறைந்த மின்னழுத்தம் மாம்பாக்கத்தில் அவதி
ADDED : செப் 07, 2025 10:33 PM
திருப்போரூர்:மாம்பாக்கம் சமத்துவபுரம் பகுதி வீடுகளில் குறைந்த மின்னழுத்தம் ஏற்படுவதால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
திருப்போரூர் ஒன்றிம் மாம்பாக்கம் ஊராட்சி, பெரியார் நினைவு சமத்துவபுரம் பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இங்கு, பல மாதங்களாக குறைந்த மின் அழுத்த பிரச்னை இருந்து வருகிறது.
இதனால், வீடுகளில் உள்ள குளிர்சாதனபெட்டி, மின்விசிறி, போன்ற மின்சாதன பொருட்கள் சரியாக இயங்காமல் பழுதடைந்து விடுகின்றன.
பகலில் வேலைக்கு சென்று வீடு திரும்பும் மக்கள், இரவில் துாங்க முடியாமல் அவதிப் படுகின்றனர். மாணவ -- மாணவியர் படிக்க முடியாமல் மன உளைச்சல் அடைகின்றனர்.
குறைந்த மின் அழுத்த பிரச்னையை சரிசெய்ய, மின்வாரிய அதிகாரிகள் இப்பகுதிக்கு விரைவில் புதிய மின்மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.