/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அச்சிறுபாக்கத்தில் பராமரிப்பு பணி 4 நாட்கள் ரயில்வே கேட் மூடல்
/
அச்சிறுபாக்கத்தில் பராமரிப்பு பணி 4 நாட்கள் ரயில்வே கேட் மூடல்
அச்சிறுபாக்கத்தில் பராமரிப்பு பணி 4 நாட்கள் ரயில்வே கேட் மூடல்
அச்சிறுபாக்கத்தில் பராமரிப்பு பணி 4 நாட்கள் ரயில்வே கேட் மூடல்
ADDED : ஜன 18, 2025 10:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் -சூனாம்பேடு நெடுஞ்சாலையில், வெங்கடேசபுரம் பகுதியில் செங்கல்பட்டு- விழுப்புரம் மார்க்கத்தில், ரயில் தண்டவாளத்தை கடக்கும் கேட் எண்.75 உள்ளது.
அச்சிறுபாக்கத்தில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், நாளை முதல் வரும் 23 வரை, இரவு 9:30 மணி முதல் நள்ளிரவு 01:00 மணி வரை, ரயில்வே கேட் முழுதும் மூடப்படும்.
பொதுமக்கள், வாகன ஓட்டிகள், கனரக வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையை பயன்படுத்தவும் என, தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால், தொழுப்பேடு மற்றும் சோத்துப்பாக்கம், மதுராந்தகம் வழியாக சூனாம்பேடு, செய்யூர் செல்லலாம்.

