/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆப்பூர் ஏரியில் ஆண் சடலம் மீட்பு
/
ஆப்பூர் ஏரியில் ஆண் சடலம் மீட்பு
ADDED : நவ 17, 2025 08:00 AM
மறைமலை நகர்: சிங்கபெருமாள் கோவில் அடுத்த ஆப்பூர் ஏரிக்கரையில் ஆண் சடலம் கிடப்பதாக, பாலுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து நடத்திய விசாரணையில், இறந்த நபர் ஆப்பூர் அடுத்த தாசரி குன்னத்துார் கிராமத்தைச் சேர்ந்த தேசப்பன், 61, என தெரிந்தது.
மீன் வியாபாரியான தேசப்பன், நேற்று முன்தினம் காலை நண்பரை சந்திக்க, ஆப்பூர் வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே இதய நோய் இருந்த நிலையில், ஏரியில் மயங்கி விழுந்து உயிரிழந்தது தெரிந்தது.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

