/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நின்னைக்காட்டூர் ஏரிக்கரையில் ஆண் சடலம் மீட்பு
/
நின்னைக்காட்டூர் ஏரிக்கரையில் ஆண் சடலம் மீட்பு
ADDED : டிச 24, 2024 10:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலைநகர்:மறைமலைநகர் அடுத்த நின்னைக்காட்டூர் ஏரிக்கரையில் உள்ள வேப்ப மரத்தில், துாக்கில் தொங்கி அழுகிய நிலையில் ஆண் சடலம் உள்ளதாக, மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், அந்த உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிந்து, இறந்த நபர் யார்? கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.