/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பொத்தேரி ஏரியில் ஆண் சடலம் மீட்பு
/
பொத்தேரி ஏரியில் ஆண் சடலம் மீட்பு
ADDED : ஆக 08, 2025 02:09 AM
மறைமலை நகர்:பொத்தேரி ஏரியில், அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்ட போலீசார், இறந்தவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
மறைமலை நகர் அடுத்த பொத்தேரி ஜி.எஸ்.டி., சாலையோரம் உள்ள பொத்தேரி ஏரியில், அழுகிய நிலையில் ஆண் சடலம் மிதப்பதாக, மறைமலை நகர் போலீசாருக்கு நேற்று மதியம் தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் மற்றும் மறைமலை நகர் தீயணைப்பு வீரர்கள், தண்ணீரில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, இறந்த நபர் யார்? ஏரியில் குளிக்கச் சென்று தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.