/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மறைமலை நகரில் சாலையோரம் ஆண் சடலம் மீட்பு
/
மறைமலை நகரில் சாலையோரம் ஆண் சடலம் மீட்பு
ADDED : அக் 28, 2025 10:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர்:மறைமலை நகரில் சாலையோரம், ஆண் சடலம் மீட்கப்பட்டது.
மறைமலை நகர் நகராட்சி தீயணைப்பு நிலையம் எதிரே, சிங்காரவேலன் தெரு டாஸ்மாக் கடை அருகில், 65 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக, மறைமலை நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், அந்த உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து, நின்னக்கரை கிராம நிர்வாக அலுவலர் விநாயகமூர்த்தி, 45, அளித்த புகாரின்படி, போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

