ADDED : ஜன 04, 2025 09:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:செங்கல்பட்டு - திண்டிவனம் ரயில்வே தண்டவாளத்தில் செங்கல்பட்டு அடுத்த வல்லம் அருகில் தண்டவாளத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக செங்கல்பட்டு ரயில்வே போலீசாருக்கு பொது மக்கள் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே போலீசார் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார்? தற்கொலை செய்து கொண்டாரா?அல்லது தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி உயிரிழந்தாரா? என, விசாரணை நடத்தி வருகின்றனர்.