/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தவர் பலி
/
படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தவர் பலி
ADDED : மார் 15, 2025 06:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த கீழுர் கிராமத்தை சேர்ந்தவர் முணு ஆதி, 44, இவர் கடந்த 9 ம் தேதி இரவு 10:00 மணிக்கு மது போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் படிக்கட்டு ஏறும்போது தவறி கிழே விழுந்து தலையில் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை இறந்தார். ூ
இதுகுறித்து காயார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.