/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மரத்திலிருந்து விழுந்தவர் சிகிச்சை பலனின்றி பலி
/
மரத்திலிருந்து விழுந்தவர் சிகிச்சை பலனின்றி பலி
ADDED : ஏப் 13, 2025 08:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுராந்தகம்:மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட புது மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் புண்ணியகோட்டி, 60.
இவர் கடந்த, 9ம் தேதி மது குடித்துள்ளார்.
பின், மது போதையில் அவரது வீட்டின் அருகிலுள்ள மாமரத்தில் மாங்காய் பறிக்க ஏறியுள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார்.
அங்கிருந்தோர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்நிலையில் நேற்று, சிகிச்சை பலனின்றி புண்ணியகோட்டி உயிரிழந்தார்.
மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.