/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பொது 21 ஆண்டாக போலீசுக்கு 'தண்ணி' காட்டியவர் கைது
/
பொது 21 ஆண்டாக போலீசுக்கு 'தண்ணி' காட்டியவர் கைது
ADDED : மே 20, 2025 12:41 AM

சென்னை, மதுராந்தகம், பட்டுவாரி நகரைச் சேர்ந்தவர் முனுசாமி, 38. கடந்த 2016ல், நடிகர் விஜயகுமார் வீட்டில் திருடிய வழக்கில் தொடர்புடையவர். இவர் மீது, ஆவடி, திருமுல்லைவாயில், ஜெ.ஜெ நகர், தலைமை செயலக காலனி, வில்லிவாக்கம் உள்ளிட்ட காவல் நிலையங்களில், 20க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன.
இவருக்கு, 'பிடிவாரன்ட்' பிறப்பிக்கப்பட்ட நிலையில், 21 ஆண்டுகளாக போலீசாரிடம் சிக்காமல், தலைமறைவாக இருந்தார்.
கடந்தாண்டு இறுதியில், மீண்டும் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால், போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில், வையாவூர் பகுதியில் பதுங்கி இருந்த முனுசாமியை, திருமுல்லைவாயில் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் தலைமையிலான போலீசார், கைது செய்தனர்.
விசாரணைக்குப் பின் முனுசாமி நேற்று, அம்பத்துார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.