/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மருத்துவ கழிவுகள் எரிப்பு கருநிலம் கிராமத்தில் அவதி
/
மருத்துவ கழிவுகள் எரிப்பு கருநிலம் கிராமத்தில் அவதி
மருத்துவ கழிவுகள் எரிப்பு கருநிலம் கிராமத்தில் அவதி
மருத்துவ கழிவுகள் எரிப்பு கருநிலம் கிராமத்தில் அவதி
ADDED : அக் 31, 2025 01:25 AM

மறைமலை நகர்:  சிங்கபெருமாள் கோவில் அருகில், கருநிலம் ஊராட்சியில் உள்ள நீர்வழித்தடத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டி எரிக்கப்படுவதால், கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், கருநிலம் ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கிராம மக்கள் விவசாயம் மற்றும் மறைமலை நகர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், கருநிலம் கிராம எல்லைக்கும் மருதேரி கிராமத்திற்கும் இடையே உள்ள நீர்வழித்தடத்தில், தொடர்ந்து தொழிற்சாலை கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள், இரவு நேரத்தில் கொட்டி எரிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், இதனுடன் குப்பையையும் எரிப்பதால், இப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:
நீர்வழித்தடத்தில் மருத்துவ கழிவுகள் எரிக்கப்படுவதால் நீர்நிலைகள் விவசாய நிலங்கள், வனப்பகுதி உள்ளிட்டவை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
தொடர்ந்து எரிக்கப்படும் குப்பையின் கரும்புகை காற்றில் பரவுவதால், கிராம மக்களுக்கு சுவாச பிரச்னை ஏற்படுகிறது. மருதேரி கிராமம் திருப்போரூர் ஒன்றியத்திலும், கருநிலம் காட்டாங்கொளத்துார் ஒன்றியத்திலும் உள்ளதால், யார் நடவடிக்கை எடுப்பது என்பதில் அதிகாரிகளுக்கிடையே சிக்கல் நீடிக்கிறது.
எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, இங்கு குப்பை கொட்டி எரிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

