ADDED : ஜூலை 16, 2026 05:03 AM
அ நிறம் | அளவு
செங்கல்பட்டு: வறட்சியை எதிர்கொள்ள நுண்ணீர் பாசன முறையை விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டும் என, செங்கல்பட்டு மாவட்ட வேளாண் இணை இயக்குநர் செல்லபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வேளாண் இணை இயக்குநர் வெளியிட்ட அறிக்கை:
'எல் நினோ' எனும் வெப்ப அலை கால மாற்றத்தால், தென்மேற்கு பருவ மழை பாதிக்கப்படும்.
இதை எதிர்கொள்ள விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க, பல்வேறு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, உயிர் உரங்களை அதிகரிக்க வேண்டும். நண்பகலில் நீர்ப்பாசனம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
மண் ஈரப்பதத்தை பாதுகாத்து மேற்புற வெப்ப நிலையை குறைக்க வேண்டும்.
மேலும், வறட்சியை எதிர்கொள்ள நுண்ணீர் பாசன முறைகளை விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
