sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மின்னழுத்த குறைபாடு பிரச்னை சீரமைக்க அமைச்சர் அன்பரசன் உத்தரவு

/

மின்னழுத்த குறைபாடு பிரச்னை சீரமைக்க அமைச்சர் அன்பரசன் உத்தரவு

மின்னழுத்த குறைபாடு பிரச்னை சீரமைக்க அமைச்சர் அன்பரசன் உத்தரவு

மின்னழுத்த குறைபாடு பிரச்னை சீரமைக்க அமைச்சர் அன்பரசன் உத்தரவு


ADDED : மே 22, 2025 01:43 AM

Google News

ADDED : மே 22, 2025 01:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் கூட்டம், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் தலைமையில் நடந்தது.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார், கூடுதல் கலெக்டர் நாராயணசர்மா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு ஒதுக்கீடு, குறைந்த மின்னழுத்த மின்சாரம் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 228 மனுக்கள் வரப்பெற்றன.

இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க, அனைத்து துறை அதிகாரிகளுக்கும், அமைச்சர் அன்பரசன் உத்தரவிட்டார்.

அதன் பின், வண்டலுார் அடுத்த கீரப்பாக்கம் கிராமத்தில், தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு பெற்ற 50 பயனாளிகளுக்கு ஒதுக்கீட்டு ஆணையை, அமைச்சர் அன்பரசன் வழங்கினார்.

அதன் பின், அமைச்சர் அன்பரசன் பேசியதாவது:

மாவட்டத்தில், குறைந்த மின்னழுத்த மின்சாரத்ததால், மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக, புகார்கள் வருகின்றன.

மின்சாரம் சீராக வழங்க, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடவடிக்கை எடுக்காவிட்டால், உங்கள் துறை அமைச்சரை அழைத்து, ஆய்வுக்கூட்டம் நடத்தப்படும்.

தாம்பரம், பல்லாவரம், வண்டலுார் ஆகிய தாலுகா பகுதியில், இலவச வீட்டுமனை பட்டா அதிகமாக வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூடுதல் அதிகாரிகளை நியமித்து, வீட்டுமனை பட்டா வழங்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us