sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பரனுாரில் பழுதான தானியங்கி சிக்னல் சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

/

பரனுாரில் பழுதான தானியங்கி சிக்னல் சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

பரனுாரில் பழுதான தானியங்கி சிக்னல் சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

பரனுாரில் பழுதான தானியங்கி சிக்னல் சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை


ADDED : ஜூலை 29, 2025 11:30 PM

Google News

ADDED : ஜூலை 29, 2025 11:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர் பரனுார் பகுதியில், பழுதாகியுள்ள தானியங்கி சிக்னலை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையான ஜி.எஸ்.டி., சாலையில் தினமும், பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில், பரனுார் பகுதியில் செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரே, சாலை சந்திப்பு உள்ளது.

பரனுார், செட்டிபுண்ணியம், டாக்கா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிப்போர், தினமும் இந்த சந்திப்பு வழியாக ஜி.எஸ்.டி., சாலையைக் கடந்து சென்று வருகின்றனர்.

மேலும், வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு தினமும், நுாற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.

போக்குவரத்து அதிகமுள்ள இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி, 'சிக்னல்' இயங்காமல், வெறும் காட்சிப்பொருளாக உள்ளதால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர்.

அருகில் பேருந்து நிறுத்தமும் உள்ளதால், பயணியர் ஜி.எஸ்.டி., சாலையைக் கடந்து செல்லும் போது, அச்சத்துடனேயே செல்லும் நிலை உள்ளது.

இப்பகுதியில் பெரும் விபத்து ஏற்படும் முன், இந்த தானியங்கி சிக்னலை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us