sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

முக்கிய சந்திப்புகளில் தடுப்புகள் வாகன ஓட்டிகள் வேண்டுகோள்

/

முக்கிய சந்திப்புகளில் தடுப்புகள் வாகன ஓட்டிகள் வேண்டுகோள்

முக்கிய சந்திப்புகளில் தடுப்புகள் வாகன ஓட்டிகள் வேண்டுகோள்

முக்கிய சந்திப்புகளில் தடுப்புகள் வாகன ஓட்டிகள் வேண்டுகோள்


ADDED : அக் 03, 2025 07:34 PM

Google News

ADDED : அக் 03, 2025 07:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கபெருமாள்கோவில்:சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த, முக்கிய சாலை சந்திப்புகளில் இரும்பு தடுப்புகள் அமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர், இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்குச் செல்லும் வாகனங்களும், இந்த சாலையில் சென்று வருகின்றன.

இந்நிலையில், இச்சாலையில் ஆப்பூர், சேந்தமங்கலம், கொளத்துார் குப்பைக் கிடங்கு சந்திப்பு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில், சாலையைக் கடக்கும் கடவுப் பாதை உள்ளது. இந்த பகுதியில் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வதால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:

நெடுஞ்சாலையில் அதிக வேகத்தில் வாகனங்களில் செல்வோர், பாதசாரிகள் மீது மோதி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த இரு ஆண்டுகளில், 10க்கும் மேற்பட்டோர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்; பலர் படுகாயமடைந்து உள்ளனர்.

எனவே, நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த, முக்கிய சாலை சந்திப்புகளில், இருபுறமும் இரும்பு தடுப்புகள் அமைக்க, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us