sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 16, 2025 ,ஆவணி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தெருவில் மின்விளக்கு வசதியின்றி நயினார்குப்பம் கிராமத்தினர் அவதி

/

தெருவில் மின்விளக்கு வசதியின்றி நயினார்குப்பம் கிராமத்தினர் அவதி

தெருவில் மின்விளக்கு வசதியின்றி நயினார்குப்பம் கிராமத்தினர் அவதி

தெருவில் மின்விளக்கு வசதியின்றி நயினார்குப்பம் கிராமத்தினர் அவதி


ADDED : மே 24, 2025 08:40 PM

Google News

ADDED : மே 24, 2025 08:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்:நயினார்குப்பம் கிராமத்திலுள்ள பள்ளிக்கூட தெருவில், மின் விளக்கு வசதியின்றி பகுதிவாசிகள் தவித்து வருகின்றனர்.

செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட முதலாவது வார்டு நயினார்குப்பம் கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இங்கு, குடியிருப்பு பகுதியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும், பள்ளிக்கூடத் தெரு உள்ளது.

இந்த சாலையில் பல ஆண்டுகளாக, மின்விளக்கு வசதி இல்லை. இதனால், இரவு நேரத்தில் சாலையில் விஷ பாம்புகள் மற்றும் விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் செல்கின்றனர்.

மின் விளக்கு அமைக்க கோரி, பேரூராட்சி சார்பாக மின்வாரியத்திற்கு மனு அளித்தும், தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், பள்ளிக்கூட தெரு இருளில் மூழ்கி காணப்படுகிறது.

எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் நயினார்குப்பம், பள்ளிக்கூடத் தெருவில், மின் விளக்கு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us