/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வரும் 20ம் தேதி தேசிய தொழில் பழகுனர் முகாம்
/
வரும் 20ம் தேதி தேசிய தொழில் பழகுனர் முகாம்
ADDED : ஜன 11, 2025 07:51 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டில், பிரதம மந்திரி தேசிய தொழில்பழகுனர் முகாம், வரும் 20ம் தேதி நடக்கிறது.
இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:
மத்திய மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகளைக் கொண்டு, பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுனர் முகாம், செங்கல்பட்டு தொழிற்பயிற்சி நிலையத்தில், வரும் 20ம் தேதி காலை 10:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை நடக்கிறது.
இம்முகாமில், தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்று, தேர்வில் தேர்ச்சி பெற்ற, பல்வேறு தொழிற்பிரிவைச் சார்ந்த பயிற்சியாளர்கள் பங்கேற்று, தொழிற்பழகுனர் பயிற்சியில் இணைந்து, மத்திய அரசின் சான்றிதழ் பெற்று பயனடையலாம்.
மேலும் விவரங்களுக்கு, மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், மொபைல் எண் 6379090205- 044- 27426554 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.