sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சாய்ந்த மின் கம்பத்தை மாற்றுவதில் அலட்சியம்

/

சாய்ந்த மின் கம்பத்தை மாற்றுவதில் அலட்சியம்

சாய்ந்த மின் கம்பத்தை மாற்றுவதில் அலட்சியம்

சாய்ந்த மின் கம்பத்தை மாற்றுவதில் அலட்சியம்


ADDED : ஜன 19, 2025 02:22 AM

Google News

ADDED : ஜன 19, 2025 02:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில் - ஸ்ரீ பெரும்புதுார் சாலை 25 கி. மீ., துாரம் உடையது. இந்த சாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

மேலும் திருக்கச்சூர், கொளத்துார், தெள்ளிமேடு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினமும் சென்று வருகின்றனர். ஒரகடம், ஸ்ரீ பெரும்புதுார் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்களும் இதில் சென்று வருகின்றன.

இந்த சாலையில் சிங்கபெருமாள் கோவில் ரயில்வே கேட் அருகில் சாலை ஓரம் மின்வாரியம் சார்பில் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு உயர் மின் அழுத்த மின்சாரம் செல்கிறது.

இந்த மின் கம்பத்தில் இரண்டு மாதங்களுக்கு முன் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மின் கம்பம் சாய்ந்து, மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன.

மின் வாரிய அதிகாரிகள் மின் கம்பத்தை அகற்றி புதிய மின் கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us