sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மதுராந்தகம் மருத்துவமனையில் புதிய ஜெனரேட்டர் பொருத்தம்

/

மதுராந்தகம் மருத்துவமனையில் புதிய ஜெனரேட்டர் பொருத்தம்

மதுராந்தகம் மருத்துவமனையில் புதிய ஜெனரேட்டர் பொருத்தம்

மதுராந்தகம் மருத்துவமனையில் புதிய ஜெனரேட்டர் பொருத்தம்


ADDED : ஜூலை 24, 2025 01:32 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 01:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்,:மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு, புதிதாக 'ஜெனரேட்டர்' பொருத்தப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் 17-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், அரசு பொது மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனை சித்தாமூர், சூணாம்பேடு, அச்சிறுபாக்கம், மதுராந்தகம், ராமாபுரம், வேடந்தாங்கல் உள்ளிட்ட, 150க்கும் மேற்பட்ட கிராம மக்களின் பிரதான மருத்துவ மனையாக உள்ளது .

நாள்தோறும் புறநோயாளிகள் மற்றும் உள் நோயாளிகள் என, 1,300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் இருந்த ஜெனரேட்டர் பழுதடைந்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக பயன்பாடின்றி இருந்து வந்தது.

இதுகுறித்து, உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தரிடம், மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, எம்.எல்.ஏ., சுந்தர் ஏற்பாட்டில், 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிதாக ஜெனரேட்டர் வாங்கப்பட்டது.

இதன் திறப்பு விழா நடந்தது.

நகராட்சி தலைவர் மலர்விழி முன்னிலையில், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் தலைமையில், ஜெனரேட்டர் திறக்கப்பட்டு, மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனால், 24 மணி நேரமும், மின் இணைப்புடன் மருத்துவமனை வளாகம் செயல்படும்.






      Dinamalar
      Follow us