/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வழித்தடம் புதுசு: பேருந்து பழசு துவக்க நாளிலேயே டயர் 'டமால்'
/
வழித்தடம் புதுசு: பேருந்து பழசு துவக்க நாளிலேயே டயர் 'டமால்'
வழித்தடம் புதுசு: பேருந்து பழசு துவக்க நாளிலேயே டயர் 'டமால்'
வழித்தடம் புதுசு: பேருந்து பழசு துவக்க நாளிலேயே டயர் 'டமால்'
ADDED : ஜன 24, 2025 01:01 AM

அச்சிறுப்பாக்கம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்டது ஒரத்தி ஊராட்சி. இப்பகுதியின் அருகே, அன்னங்கால், பொறங்கால், கூணங்கரணை, ரெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகள், அரசு பேருந்து வசதியின்றி இருந்தது.
பகுதிவாசிகளின் பலகட்ட கோரிக்கைகளுக்கு பின், நேற்று முன்தினம், திருக்கழுக்குன்றம் பகுதியில் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் தலைமையில், தாம்பரம் -- திருக்கழுக்குன்றம், ஒரத்தி -- தாம்பரம் வழித்தடத்தில் செல்லும் பேருந்து துவக்க விழா நடந்தது.
இதையடுத்து, ஒரத்தியில் இருந்து அன்னங்கால், பொறங்கால், ரெட்டிபாளையம், எலப்பாக்கம் வழியாக தாம்பரம் செல்லும் தடம் எண்: 77பி பேருந்தை வரவேற்ற அச்சிறுப்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் கண்ணன் தலைமையிலான தி.மு.க.,வினர், பேருந்தை அலங்கரித்து, மலர்கள் சூடிவரவேற்றனர்.
பொறங்கால் பகுதியில் இருந்து ஒரத்தி மேல்நிலைப்பள்ளிக்கு சென்ற மாணவ - மாணவியர் மற்றும் பொதுமக்கள் பேருந்தில் ஏறி பயணம் செய்தனர். ஒரத்தி அருகே சென்றபோது, திடீரென 'டமால்' என, பெரும் சத்தத்துடன் டயர் வெடித்தது.
ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டது. இச்சம்பவம் பகுதிவாசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து பயணியர் கூறுகையில், ''சுந்தராடிராவல்ஸ்' பட பாணியில் காலாவதியான பேருந்திற்கு பெயின்ட் அடித்து, டயர்களில் கருப்பு வர்ணம் தீட்டி, புதிய பேருந்து என மக்களை ஏமாற்றியுள்ளனர். வழித்தடம் மட்டுமே புதியது, பேருந்து பழசு தான்,'' என, கிண்டலடித்து சென்றனர்.

