sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கூடுவாஞ்சேரியில் கஞ்சா விற்ற வடமாநில இளைஞர் கைது

/

கூடுவாஞ்சேரியில் கஞ்சா விற்ற வடமாநில இளைஞர் கைது

கூடுவாஞ்சேரியில் கஞ்சா விற்ற வடமாநில இளைஞர் கைது

கூடுவாஞ்சேரியில் கஞ்சா விற்ற வடமாநில இளைஞர் கைது


ADDED : ஜூன் 13, 2025 02:20 AM

Google News

ADDED : ஜூன் 13, 2025 02:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி:செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி நகராட்சியில், வட மாநில கூலி தொழிலாளர்களை குறிவைத்து, கஞ்சா விற்பனை நடப்பதாக தகவல் வர, போலீசார் தீவிர கண்காணிப்பிலும், ரோந்து பணியிலும் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் காலை, கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே, சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

அந்த வாலிபர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால், அவரிடமிருந்த உடைமைகளை போலீசார் சோதனை செய்தனர். அதில் 3 கிலோ கஞ்சா இருந்தது.

அந்த வாலிபரை, கூடுவாஞ்சேரி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்த போது, அவர் மேற்கு திரிபுரா, செப்பிஜாலா மாவட்டம், தெற்கு பாரபூர் கிராமத்தைச் சேர்ந்த இக்பால் உசேன், 24, என தெரிந்தது.

இதையடுத்து, இக்பால் உசேன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை செங்கல்பட்டு நீதிமன்றத்தில், நேற்று முன்தினம் இரவு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us