sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

திருமண நிதியுதவி பெற லஞ்சம் பெற்ற அலுவலருக்கு ஓராண்டு சிறை

/

திருமண நிதியுதவி பெற லஞ்சம் பெற்ற அலுவலருக்கு ஓராண்டு சிறை

திருமண நிதியுதவி பெற லஞ்சம் பெற்ற அலுவலருக்கு ஓராண்டு சிறை

திருமண நிதியுதவி பெற லஞ்சம் பெற்ற அலுவலருக்கு ஓராண்டு சிறை


ADDED : ஜன 30, 2025 10:35 PM

Google News

ADDED : ஜன 30, 2025 10:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த, வினாயகநல்லுாரை சேர்ந்த ரங்கநாதன் மகள் தேவி, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த, காழியூர் கிராமத்தைச்சேர்ந்த கோபால் மகன் ஸ்ரீதர் என்பவரை திருணம் செய்துள்ளார்.

திருமணத்திற்கு முன்பே, தேவியின் தந்தை ரங்நாதன் இறந்து விட்டார். அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், திருமண உதவி திட்டத்தில், 20,000 நிதி பெற உரிய ஆவணங்களுடன், தேவி 2009 ம் ஆண்டு, விண்ணப்பித்தார்.

அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரிந்த ஊர்நல அலுவலர் ஜோயல்பத்மினி என்பவரை, அணுகினார். திருமண நிதியுதவி காசோலை வந்திருப்பதாக கூறி 850 ரூபாய் லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத தேவியின் கணவர் ஸ்ரீதர், காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த ரசாயனம் தடவிய 850 ரூபாயை ஸ்ரீதர் இடம் கொடுத்து அனுப்பியபோது, அதை வாங்கிய ஜோயல்பத்மினியை மறைந்திருந்த போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

வழக்கு விசாரணை, செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிபதி ஜெயஸ்ரீ முன்னிலையில் நடை பெற்றது. அரசு தரப்பில் வழக்கறிஞர் கவிதா ஆஜரானார். வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், ஜோயல் பத்மினி, 73 என்பவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி ஜெயஸ்ரீ தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us