/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குறுக்கே வந்த மாடு மொபட்டில் மோதி ஒருவர் பலி
/
குறுக்கே வந்த மாடு மொபட்டில் மோதி ஒருவர் பலி
ADDED : ஆக 14, 2025 11:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த தேனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி, 50.
இவர், நேற்று முன்தினம் இரவு 8:30 மணியளவில், குண்ணவாக்கம் ஏரிக்கரை சாலையில், 'டி.வி.எஸ்., - எக்ஸ்.எல்.,' மொபெட்டில் சென்றார்.
அப்போது, மாடு ஒன்று குறுக்கே வந்து, இவரது ஸ்கூட்டர் மீது மோதியுள்ளது.
இதில், ரவி தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
சிங்கபெருமாள் கோவில், பாரேரி பகுதியிலுள்ள அரசு அவசர சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் இரவு 9:00 மணி யளவில் உயிரிழந்தார்.
செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

