sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

உள்ளாட்சி பகுதிகளில் திட்டப்பணிகள் விரைந்து முடிக்க உத்தரவு

/

உள்ளாட்சி பகுதிகளில் திட்டப்பணிகள் விரைந்து முடிக்க உத்தரவு

உள்ளாட்சி பகுதிகளில் திட்டப்பணிகள் விரைந்து முடிக்க உத்தரவு

உள்ளாட்சி பகுதிகளில் திட்டப்பணிகள் விரைந்து முடிக்க உத்தரவு


ADDED : ஜன 24, 2025 12:59 AM

Google News

ADDED : ஜன 24, 2025 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு,

நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில், திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக, மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில், மாவட்ட கண்காணிப்பு குழுக் கூட்டம், கண்காணிப்பாளர் ராகுல்நாத் தலைமையில், நேற்று நடந்தது.

சப்- கலெக்டர் நாராயணசர்மா, தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், கூடுதல் கலெக்டர் அனாமிகா, மாவட்ட வன அலுவலர் ரவி மீனா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், தாம்பரம் மாநகராட்சி, செங்கல்பட்டு, மதுராந்தகம், மறைமலைநகர் நகராட்சி, நந்திவரம் கூடுவாஞ்சேரி ஆகிய நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் உள்ளிட்ட அனைத்துதுறைகள் பணிகள் குறித்து, ஆய்வு செய்யப்பட்டது.

அதன்பின், நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில், திட்டப்பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு, நான்கு மாதங்களுக்கு மேலாக பணிகள் துவக்கப்படாமல் உள்ளன. இப்பணிகளை ஐந்து மாதங்களுக்குள் முடிக்க, அதிகாரிகள் ஈடுபட வேண்டும். மற்றத்துறையினரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

திட்டப்பணிகளில் துவங்குவதில், பிரச்னை இருந்தால், கலெக்டர் கவனத்திற்கு கொண்டு சென்று, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு, கண்காணிப்பு அலுவலர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us