sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மூளைச்சாவு அடைந்த வாலிபர் உறுப்புகள் தானம்

/

மூளைச்சாவு அடைந்த வாலிபர் உறுப்புகள் தானம்

மூளைச்சாவு அடைந்த வாலிபர் உறுப்புகள் தானம்

மூளைச்சாவு அடைந்த வாலிபர் உறுப்புகள் தானம்


ADDED : அக் 14, 2025 08:36 PM

Google News

ADDED : அக் 14, 2025 08:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:மூளைச்சாவு அடைந்து இறந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

மறைமலை நகர் அடுத்த கூடலூர் பகுதியை சேர்ந்தவர் பூபாலன், 36. சிப்காட் பகுதியில் பூபாலன் இன்ஜினியரிங் ஒர்க்ஸ் என்ற நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவருக்கு திருமணமாகி உஷா என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். கடந்த 12ம் தேதி மாலை 4:00மணிக்கு தொழிற்சாலையில் உள்ள சிமென்ட் கூரை உடைந்து மழைநீர் கசிந்தது.

பூபாலன் கூரை மீது ஏறி சரி செய்ய முயன்ற போது கீழே தவறி விழுந்து படுகாயமடைந்தார். அங்கிருந்தோர் அவரை மீட்டு பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பூபாலன் மூளைச்சாவு அடைந்தார். மறைமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பூபாலனின் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக மனைவி உஷா மற்றும் உறவினர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து, பூபாலனின் இதயம், இதய வால்வுகள், கணையம், சிறுநீரகம், நுரையீரல், கண்கள், கல்லீரல் தானமாக வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us