sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

விபத்தில் சேதமடைந்த மின்கம்பிகள் சீரமைக்காததால் ஓதியூரில் அவதி

/

விபத்தில் சேதமடைந்த மின்கம்பிகள் சீரமைக்காததால் ஓதியூரில் அவதி

விபத்தில் சேதமடைந்த மின்கம்பிகள் சீரமைக்காததால் ஓதியூரில் அவதி

விபத்தில் சேதமடைந்த மின்கம்பிகள் சீரமைக்காததால் ஓதியூரில் அவதி


ADDED : செப் 04, 2025 02:35 AM

Google News

ADDED : செப் 04, 2025 02:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்:ஓதியூரில், லாரி மோதி சேதமடைந்த மின்கம்பிகள் சீரமைக்கப்படாமல் உள்ளதால், மின்சாரமின்றி கிராமத்தினர் அவதிப்பட்டு வருகின்றனர். சேதமடைந்த மின்கம்பிகளை சீரமைத்து, மின் வினியோகம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட ஓதியூர் பகுதியில், கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த 25ம் தேதி, இச்சாலையில் சென்ற லாரி, சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது மோதியதால், மின்கம்பிகள் அறுந்து கிழக்கு கடற்கரை சாலை நடுவே விழுந்தன.

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்து, சாலையிலிருந்து மின் கம்பிகளை அகற்றினர்.

ஆனால், தற்போது வரை மின்கம்பிகள் சீரமைக்கப்படாமல் உள்ளதால், 10 நாட்களாக ஓதியூர் கிராமத்தில், பல குடும்பத்தினர் மின்சாரமின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.

மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், மின் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்த மின்கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us