sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பல்லாவரம் பெண் பல் மருத்துவர் பூட்டிய வீட்டில் சடலமாக மீட்பு

/

பல்லாவரம் பெண் பல் மருத்துவர் பூட்டிய வீட்டில் சடலமாக மீட்பு

பல்லாவரம் பெண் பல் மருத்துவர் பூட்டிய வீட்டில் சடலமாக மீட்பு

பல்லாவரம் பெண் பல் மருத்துவர் பூட்டிய வீட்டில் சடலமாக மீட்பு


ADDED : பிப் 01, 2025 12:32 AM

Google News

ADDED : பிப் 01, 2025 12:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லாவரம்:ஜமீன் பல்லாவரம், பாரதி நகர் 2வது குறுக்கு தெரு அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் தனலட்சுமி, 43; பல் மருத்துவர். இவர், சென்னை அரசு பல் மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனையில், உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, இவரது வீட்டில் தீப்பிடித்து எரிந்து, வெடி சத்தம் கேட்பதாக, அருகில் வசிப்பவர்கள், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். பல்லாவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தனலட்சுமி தீக்காயங்களுடன் இறந்து கிடந்தார். அருகே மண்ணெண்ணெய் கேன் மற்றும் தீப்பெட்டி இருந்ததாக கூறப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் வருவதற்குள் தீ அணைக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் தனலட்சுமியின் உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.

இதில் தெரிய வந்ததாவது:

தனலட்சுமியின் சொந்த ஊர் மதுரை. இவரது கணவர் பாலவெங்கடேஷ். இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. கணவரை விவாகரத்து செய்துவிட்டு, கடந்த ஓராண்டாக தனியாக வசிந்து வந்தார். ஜமீன் பல்லாவரத்தில், நான்கு மாதங்களாக வசிந்து வந்தார்.

தனலட்சுமி, சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தன் சகோதரர் துரை கதிர்வேல் என்பவரிடம், தான் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக, தனலட்சுமி கூறி வந்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில், தன்னைத்தானே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், தனலட்சுமி உடலில் பற்றி எரிந்த தீயால், வீட்டில் இருந்த 'ஏசி' மற்றும் மின் சாதனங்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்ததாக, போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us