sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 மறைமலை நகர் சிப்காட் பகுதியில் சிதிலமடைந்த மின் கம்பங்களால் பீதி

/

 மறைமலை நகர் சிப்காட் பகுதியில் சிதிலமடைந்த மின் கம்பங்களால் பீதி

 மறைமலை நகர் சிப்காட் பகுதியில் சிதிலமடைந்த மின் கம்பங்களால் பீதி

 மறைமலை நகர் சிப்காட் பகுதியில் சிதிலமடைந்த மின் கம்பங்களால் பீதி


ADDED : ஜன 03, 2026 05:33 AM

Google News

ADDED : ஜன 03, 2026 05:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்: மறைமலை நகர் சிப்காட் பகுதியில் சேதமடைந்துள்ள மின் கம்பங்களை மாற்றியமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறைமலை நகர் சிப்காட் பகுதியில் 250க்கும் மேற்பட்ட வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள் மற்றும் அதைச் சார்ந்த தொழிற்சாலைகள் உள்ளன.

இவற்றில், மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வே லை பார்த்து வருகின்றனர்.

இந்த தொழிற்சாலைகளுக்கு மறைமலை நகர் துணை மின் நிலையத்தில் இருந்து, மும்முனை இணைப்பு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த சிப்காட் பகுதியில் பெரியார் சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலை ஓரம் உள்ள 20க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் மிகவும் சிதிலமடைந்து, கான்கிரீட் பூச்சு உதிர்ந்து, எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளன.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:

மறைமலை நகர் சிப்காட் பகுதி மற்றும் மெல்ரோசாபுரம்- கீழக்கரணை செல்லும் சாலை உள்ளிட்ட பல இடங்களில் மின் கம்பங்கள் மிகவும் சேதமடைந்து உள்ளன.

இதன் காரணமாக வாகனங்களை இயக்கும் போது அச்சத்துடனேயே இயக்க வேண்டிய சூழல் உள்ளது.

எப்போது வேண்டுமானாலும், மின் கம்பங்கள் முறிந்து விழும் அபாயம் உள்ளது.

எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன், மின் கம்பங்களை மாற்றியமைக்க மின் வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us