sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

அபாய நிலையில் நிழற்குடை சீரமைக்க பயணியர் கோரிக்கை

/

அபாய நிலையில் நிழற்குடை சீரமைக்க பயணியர் கோரிக்கை

அபாய நிலையில் நிழற்குடை சீரமைக்க பயணியர் கோரிக்கை

அபாய நிலையில் நிழற்குடை சீரமைக்க பயணியர் கோரிக்கை


ADDED : மே 02, 2025 01:55 AM

Google News

ADDED : மே 02, 2025 01:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி அருகே, பேருந்து நிழற்குடை கட்டடம், இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. அதை புனரமைக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூடுவாஞ்சேரியிலிருந்து தாம்பரம் நோக்கிச் செல்லக்கூடிய ஜி.எஸ்.டி., சாலையில், மின்வாரியம் பேருந்து நிறுத்தம் உள்ளது. தினமும் 2,000க்கும் மேற்பட்ட பயணியர், இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இதில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பேருந்து நிழற்குடை கட்டடம் சேதமடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. தவிர, நிழற்குடை கட்டடம் முன் வளர்ந்து நிற்கும் மரம், பேருந்துகள் நின்று செல்ல இடையூறாக உள்ளது.

மேலும், நிழற்குடையின் பின்புறம் கழிவுநீர், குப்பை தேங்கி, ஆரோக்கியமற்ற சூழலும் நிலவுகிறது.

எனவே, நிழற்குடை கட்டடம் முன் உள்ள மரத்தை அகற்றவும், கட்டுமானத்தை செப்பனிடவும், கழிவுநீரை அகற்றவும் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை வைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us