/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பராமரிப்பற்ற பஸ் நிழற்குடை சீரமைக்க பயணியர் வேண்டுகோள்
/
பராமரிப்பற்ற பஸ் நிழற்குடை சீரமைக்க பயணியர் வேண்டுகோள்
பராமரிப்பற்ற பஸ் நிழற்குடை சீரமைக்க பயணியர் வேண்டுகோள்
பராமரிப்பற்ற பஸ் நிழற்குடை சீரமைக்க பயணியர் வேண்டுகோள்
ADDED : மே 19, 2025 02:37 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த மாமண்டூரில், சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம், மதுராந்தகம் மார்க்கத்தில், பாலாற்றங்கரை அருகே பேருந்து பயணியர் நிழற்குடை உள்ளது.
காஞ்சிபுரம் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில், 2018 - -19ல், ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த நிழற்குடை அமைக்கப்பட்டது.
தற்போது, இந்த பயணியர் நிழற்குடையில் இரும்பு கம்பிகளால் அமைக்கப்பட்ட இருக்கைகள் சேதமடைந்து, துருப்பிடித்து உடைந்து உள்ளன.
நிழற்குடையின் தரைப்பகுதியில் பதிக்கப்பட்ட,'டைல்ஸ்' கற்கள் பெயர்ந்து, உடைந்து உள்ளன.
தரை பகுதியில் விரிசல் ஏற்பட்டு உள்ளதால், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் தங்குமிடமாக மாறியுள்ளது.
எனவே, சேதமடைந்த இருக்கைகளை அப்புறப்படுத்தி, புதிய இருக்கைகள் அமைக்கவும், நிழற்குடையின் தரைப்பகுதியை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.