sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பூட்டிக்கிடக்கும் நேர காப்பாளர் அறை திருப்போரூரில் பயணியர் திணறல்

/

பூட்டிக்கிடக்கும் நேர காப்பாளர் அறை திருப்போரூரில் பயணியர் திணறல்

பூட்டிக்கிடக்கும் நேர காப்பாளர் அறை திருப்போரூரில் பயணியர் திணறல்

பூட்டிக்கிடக்கும் நேர காப்பாளர் அறை திருப்போரூரில் பயணியர் திணறல்


ADDED : செப் 29, 2025 01:38 AM

Google News

ADDED : செப் 29, 2025 01:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:திருப்போரூர் பேருந்து நிலையத்தில், பூட்டிக் கிடக்கும் நேரக் காப்பாளர் அறையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்போரூர் பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டு, -திருக்கழுக்குன்றம், தாம்பரம் ஆகிய தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

திருப்போரூரைச் சுற்றி, 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராம மக்கள், தினமும் திருப்போரூர் வந்து, அங்கிருந்து பேருந்து மூலமாக வெளியிடங்களுக்குச் சென்று வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, ஆலத்துார் சிட்கோ, சிறுசேரி சிப்காட் மற்றும் பள்ளிகள், கல்லுாரிகளுக்கு, தினமும் தொழிலாளர்கள், மாணவர்கள் வந்து செல்கின்றனர்.

முக்கியமான இந்த திருப்போரூர் பேருந்து நிலையத்தில், தனித்தனியாக இரண்டு நேர காப்பாளர் அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இவற் றின் மூலமாக, பேருந்துகள் குறித்த விபரம் அறிவிக்கப்பட்டதால், பயணியருக்கு உதவியாக இருந்தது. இந்நிலையில், கடந்த ஓராண்டாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்ட பேருந்து நேரக்காப்பாளர் அறை பூட்டியே கிடக்கிறது. இதனால், பேருந்துகள் புறப்படும் நேரம், வரும் நேரம் குறித்த விபரங்களை பெற முடியாமல், பயணியர் அவதிப்படுகின்றனர்.

எனவே, பயணியர் நலன் கருதி, மூடிக்கிடக்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்ட பேருந்து நேரக் காப்பாளர் அறையை, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, பயணியர் கோரிக்கை வைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us