sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

100 நாள் வேலை வழங்க கோரி பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை

/

100 நாள் வேலை வழங்க கோரி பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை

100 நாள் வேலை வழங்க கோரி பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை

100 நாள் வேலை வழங்க கோரி பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை


ADDED : ஆக 14, 2025 11:30 PM

Google News

ADDED : ஆக 14, 2025 11:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்;நுாறு நாள் வேலை வழங்கக்கோரி, அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, அன்னங்கால் கிராமத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அச்சிறுபாக்கம் ஒன்றியம், அன்னங்கால் ஊராட்சிக்கு உட்பட்டு கூனங்கரணை, ராஜாம்பாளையம், பழவந்தாங்கல் ஓடை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.

இந்த கிராமங்களில் புதிதாக குளம் அமைத்தல், மரக்கன்று நடுதல், நீர் வரத்து கால்வாயை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள், 100 நாள் பணியாளர்களைக் கொண்டு செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கூனங்கரணை கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி வழங்க கோரி, அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களிடம் அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அச்சிறுபாக்கம் போலீசார் பேச்சு நடத்தினர்.

இதையடுத்து, வரும் பணி நாட்களில் அனைவருக்கும் வேலை வழங்கப்படும் என, அதிகாரிகளின் தெரிவித்தனர். பின்னர், அவர்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us