/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வயல்வெளியாக மாறிய பூங்கா அச்சிறுபாக்கத்தில் மக்கள் அவதி
/
வயல்வெளியாக மாறிய பூங்கா அச்சிறுபாக்கத்தில் மக்கள் அவதி
வயல்வெளியாக மாறிய பூங்கா அச்சிறுபாக்கத்தில் மக்கள் அவதி
வயல்வெளியாக மாறிய பூங்கா அச்சிறுபாக்கத்தில் மக்கள் அவதி
ADDED : டிச 15, 2025 05:50 AM

அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கத்தில், வயல்வெளியாக மாறிய பூங்காவை சீரமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அச்சிறுபாக்கம் பேரூராட்சி, 15 வார்டுகளை உள்ளடக்கியது. இதில், 5வது வார்டு ராவுத்தநல்லுார் வி.ஐ.பி., நகர், குடியிருப்புகள் நிறைந்த பகுதியில், அம்ரித் திட்டத்தின் கீழ், 2022 -- 23ல், 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சிறுவர் விளையாட்டு பூங்கா கட்டப்பட்டது.
நடைபாதை, ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு மற்றும் ஆழ்துளை கிணறு அமைத்து, குடிநீர் டேங்க் மற்றும் கண்காணிப்பு 'கேமரா'க்கள் உள்ளிட்ட, அனைத்து வசதிகளுடன் பூங்கா அமைக்கப்பட்டது.
வடகிழக்கு பருவ மழையின் காரணமாக, இப்பகுதியில் சேகரமாகும் மழைநீர், பூங்கா வளாகத்தில் தேங்கியது. தாழ்வான பகுதியில் விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டதால், மழைநீர் தேங்கி நிற்பது தொடர்கிறது.
தற்போது மழை நீர் குறைந்து, பூங்கா பகுதியில் சேறும் சகதியுமாகி துர்நாற்றம் வீசுகிறது.
அத்துடன், வயல்வெளி போல பூங்காவில் புற்கள் வளர்ந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும், இரும்புக் கம்பிகளால் ஆன விளையாட்டு சாதனங்கள் வீணாகி வருகின்றன.
நடைபாதையில் பதிக்கப்பட்ட சிமென்ட் கல் சரிந்து, சேதமடைந்து தரமற்ற நிலையில் உள்ளது.
சிறுவர்களின் பயன்பாட்டிற்கு அமைக்கப்பட்ட பூங்கா பயன்பாடு இல்லாமல் வீணாகி வருவது, அப்பகுதிவாசி களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, பூங்காவினுள் மழைநீர் தேங்காதவாறு, மண் கொட்டி உயரம் ஏற்படுத்த வேண்டும்.
பூங்காவை சீரமைத்து, விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர, பேரூராட்சி அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

