sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 கிணற்றின் மீது இரும்பு தடுப்பு திருமணி மக்கள் எதிர்பார்ப்பு

/

 கிணற்றின் மீது இரும்பு தடுப்பு திருமணி மக்கள் எதிர்பார்ப்பு

 கிணற்றின் மீது இரும்பு தடுப்பு திருமணி மக்கள் எதிர்பார்ப்பு

 கிணற்றின் மீது இரும்பு தடுப்பு திருமணி மக்கள் எதிர்பார்ப்பு


ADDED : டிச 27, 2025 05:54 AM

Google News

ADDED : டிச 27, 2025 05:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே திருமணி ஊராட்சி யில் உள்ள பொது கிணற்றின் மீது அமைக்கப்பட்டிருந்த இரும்பு வேலி சேதமடைந் துள்ளதால், புதிதாக அமைக்க வேண்டு மென, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

செங்கல்பட்டு அடுத்த திருமணி ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளுக்கு குடிநீர் வழங்க, திருமணி பகுதியில் உள்ள ஏரியில் இரண்டு பொது கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த கிணறுகளில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஏற்றப்பட்டு, குழாய்கள் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த இரண்டு கிணறுகளில் ஒரு கிணறு, கான்கிரீட் மூடியால் மூடி பாதுகாக்கப்பட்டு வருகிறது. மற்றொரு கிணற்றின் மீது இரும்பு தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன், இந்த இரும்பு தடுப்பு வேலியின் ஒரு பகுதி உடைந்தது.

தற்போது கிணறு திறந்த நிலையில் உள்ளதால், இந்த பகுதியில் இரவு நேரங்களில் மது அருந்தும் 'குடிமகன்'கள், காலி பாட்டில்களை கிணற்றில் வீசிவிட்டுச் செல்கின்றனர். இதனால், கிணற்றில் உள்ள தண்ணீர் மாசடைந்து வருகிறது.

எனவே, இந்த கிணற்றின் மீது இரும்பு தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என, திருமணி கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us