sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செம்மண் எடுக்க ஆட்சேபனை தெரிவித்து மனு

/

செம்மண் எடுக்க ஆட்சேபனை தெரிவித்து மனு

செம்மண் எடுக்க ஆட்சேபனை தெரிவித்து மனு

செம்மண் எடுக்க ஆட்சேபனை தெரிவித்து மனு


ADDED : ஜூலை 15, 2025 12:10 AM

Google News

ADDED : ஜூலை 15, 2025 12:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர், கூடுவாஞ்சேரி அடுத்த ஒத்திவாக்கம் பெரிய ஏரியில் செம்மண் எடுக்க ஆட்சேபனை தெரிவித்து, ஒத்திவாக்கம் கிராம விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

மனுவில் கூறியிருப்பதாவது:

ஒத்திவாக்கம் கிராமத்தில், புல எண் 51ல் உள்ள 23.15 ஹெக்டேர் பெரிய ஏரி, நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரியை நம்பி பெரிய ஒத்திவாக்கம், சின்ன ஒத்திவாக்கம், எடையர்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமத்தில் உள்ள விவசாயிகள், 250 ஏக்கர் நிலப்பரப்பில், இரண்டு போகம் பயிர் செய்து வருகின்றனர்.

இந்த ஆண்டு ஏரி வற்றி உள்ளதால், இந்த நேரம் பார்த்து தனியார் குவாரி உரிமையாளர்கள், ஏரியில் செம்மண் எடுக்க திட்டமிட்டு, கிராமத்தில் உள்ள சிலரிடம் பேரம் பேசி வருகின்றனர்.

ஏற்கனவே, குமிழி மற்றும் அஸ்தினாபுரம் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் துார்வாருவதாக கூறி, 30 அடி ஆழம் மண் எடுத்ததால், ஆங்காங்கே மரண குழிகள் ஏற்பட்டு, மனித உயிர்கள் மற்றும் ஆடு, மாடுகள் விழுந்து பலியாகி உள்ளன.

இதேபோன்று எழுந்த பிரச்னையால், 2017ம் ஆண்டு செம்மண் எடுக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

எனவே, விவசாயிகளின் நலன் கருதி, ஒத்திவாக்கம் பெரிய ஏரியில் செம்மண் எடுக்க அனுமதி வழங்கக் கூடாது.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us