/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தலைமையாசிரியர் நியமிக்க கலெக்டரிடம் மனு
/
தலைமையாசிரியர் நியமிக்க கலெக்டரிடம் மனு
ADDED : பிப் 10, 2024 11:03 PM
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த நெல்லிக்குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் நியமிக்க வேண்டும் என, அப்பள்ளி கல்வி புரவலர் கெஜராஜன், கலெக்டரிடம் மனு அளித்தார்.
மனுவில் கூறியிருப்பதாவது:
நெல்லிக்குப்பத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில், 700க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் கடந்த ஜூன் மாதம் தலைமை ஆசிரியர் பணி ஓய்வு பெற்றார். அதன்பின், ஆறு மாதம் ஒருவர் பணியாற்றி மாறுதல் பெற்று சென்றுவிட்டார்.
தற்போது நான்கு மாதம் தலைமை ஆசிரியர் இல்லாமல் உள்ளது.
இதனால் மாணவ - மாணவியரின் கல்வித்தரம் கேள்விக்குறியாகி உள்ளது.
இன்னும் சில மாதங்களில் தேர்வு நடைபெற உள்ளதால், தலைமை ஆசிரியர் நியமிப்பது அவசியமானது.
எனவே, தலைமை ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.