sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பூதத்தாழ்வார் அவதார குருக்கத்தி செடி நடவு

/

பூதத்தாழ்வார் அவதார குருக்கத்தி செடி நடவு

பூதத்தாழ்வார் அவதார குருக்கத்தி செடி நடவு

பூதத்தாழ்வார் அவதார குருக்கத்தி செடி நடவு


ADDED : ஜன 06, 2025 02:32 AM

Google News

ADDED : ஜன 06, 2025 02:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம்: பூதத்தாழ்வார் அவதரித்த குருக்கத்தி மலர்ச்செடி, மாமல்லபுரத்தில் சிறப்பு பூஜையுடன் நடப்பட்டது.

வைணவ சமயத்தைச் சேர்ந்த பனிரெண்டு ஆழ்வார்களில், முதலாழ்வார்கள் என போற்றப்படுபவர்களில், பூதத்தாழ்வார் குறிப்பிடத்தக்கவர். 108 திவ்வியதேசங்களில், 63ம் கோவிலாக பிரசித்திபெற்ற, மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவில் அருகில் உள்ள, நந்தவன தோட்டத்தில், குருக்கத்தி மலரில், கதாயுத அம்சமாக, ஐப்பசி அவிட்ட நட்சத்திர நாளில், அவர் தோன்றியதாக புராணம்.

அவரது அவதார வளாகத்தில் உள்ள பழமையான மண்டபம், கடந்த ஆண்டு பிப்.,ல், ஸ்தலசயன பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தின் போது புதுப்பிக்கப்பட்டது. ஆழ்வார்கள் பாசுரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள செண்பகம், மல்லிகை, பாரிஜாதம், முல்லை, மனோரஞ்சிதம், இருவாச்சி உள்ளிட்ட மலர்ச்செடிகளை, கோவில் நிர்வாகம் நட்டு பராமரிக்கிறது.

இந்நிலையில், பூதத்தாழ்வார் தோன்றிய குருக்கத்தி மலர்ச் செடியை சிறப்பு பூஜை நடத்தி, நடப்பட்டது.






      Dinamalar
      Follow us