sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வண்டலுாரில் காணும் பொங்கல் கூட்டம்: அதிகாரிகள் ஆலோசனை

/

வண்டலுாரில் காணும் பொங்கல் கூட்டம்: அதிகாரிகள் ஆலோசனை

வண்டலுாரில் காணும் பொங்கல் கூட்டம்: அதிகாரிகள் ஆலோசனை

வண்டலுாரில் காணும் பொங்கல் கூட்டம்: அதிகாரிகள் ஆலோசனை


ADDED : டிச 21, 2024 10:24 PM

Google News

ADDED : டிச 21, 2024 10:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம்:ஒவ்வொரு ஆண்டும், பொங்கல் பண்டிகையின் போது, வண்டலுார் உயிரியல் பூங்காவிற்கு, ஏராளமான பார்வையாளர்கள் வருவர். கடந்த காணும் பொங்கலன்று, 23,000 பேர் மட்டுமே வந்தனர். இது கடந்த காலங்களை காட்டிலும் மிக குறைவு.

கடந்தாண்டு பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்ததற்கு, டிக்கெட் கட்டண உயர்வே காரணம் என, குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது, வண்டலுார் பூங்காவில் டிக்கெட் கட்டணம், 200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பொழுது போக்கு இடமாக விளங்கும் இப்பூங்காவில், டிக்கெட் கட்டணத்தை உயர்த்தும் போது பார்வையாளர்களிடம் அதிருப்தி ஏற்படும்.

இந்நிலை நீடித்தால், வரும் ஆண்டுகளில் வண்டலுார் பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை முற்றிலும் குறைய வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், இந்த காணும் பொங்கலன்று வரும் மக்கள் கூட்டத்தை சமாளிப்பது தொடர்பாக, அனைத்து துறை அதிகாரிகளுடன், நேற்று முன்தினம், பூங்கா அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

வனம், வருவாய், காவல், உள்ளாட்சி, தீயணைப்பு உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில், காணும் பொங்கல் கூட்டத்தை சமாளிப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us