/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புதர்சூழ்ந்த பூங்குணம் மகளிர் சுகாதார வளாகம்
/
புதர்சூழ்ந்த பூங்குணம் மகளிர் சுகாதார வளாகம்
ADDED : ஜன 18, 2025 01:50 AM

சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த பூங்குணம் கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்கு, ஊராட்சி நிர்வாகம், கடந்த, சில ஆண்டுகளுக்கு முன் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டி பயன்பாட்டிற்கு விடப்பட்டது. ஆரம்பத்தில் பெண்கள் சுகாதார வளாகத்தை பயன்படுத்தி வந்த நிலையில், முறையாக பராமரிக்காததால் நாளடைவில் சுகாதாரம் வளாகம் பழுதடைந்து தற்போது புதர்மண்டி உள்ளது.
இதனால் இப்பகுதி பெண்கள் இயற்கை உபாதைகளை திறந்த வெளியில் கழிக்க கடும் சிரமப்படுகின்றனர்.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் புதர்சூழ்ந்துள்ள மகளிர் சுகாதார வளாகத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.