sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

அணுகு சாலையில் பள்ளம் வாகன ஓட்டிகள் அச்சம்

/

அணுகு சாலையில் பள்ளம் வாகன ஓட்டிகள் அச்சம்

அணுகு சாலையில் பள்ளம் வாகன ஓட்டிகள் அச்சம்

அணுகு சாலையில் பள்ளம் வாகன ஓட்டிகள் அச்சம்


ADDED : செப் 15, 2025 10:35 PM

Google News

ADDED : செப் 15, 2025 10:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:பொத்தேரி பகுதியில், ஜி.எஸ்.டி., சாலையின் அணுகு சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள், அதை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறைமலை நகர் அடுத்த பொத்தேரி பகுதியில், 10,500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், தனியார் பல்கலை, தனியார் மருத்துவமனைகள் உள்ளன.

சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இந்த வழியாக செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வருகின்றனர்.

இங்கு திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அணுகு சாலையில், பூமிக்கு அடியில் தனியார் நிறுவன 'கேபிள்'கள் செல்கின்றன.

இந்த கேபிள்களை பராமரிக்கும் பணி, கடந்த சில மாதங்களாக இந்த சாலையில் நடைபெற்றன.

இதற்காக, அணுகு சாலையில், 'பொக்லைன்' இயந்திரம் மூலமாக, 5 அடி அகலத்தில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு, சீரமைப்பு பணிகள் நடந்தன. அதன் பின், சிமென்ட் கான்கிரீட் கலவையால் பள்ளம் மூடப்பட்டது.

தற்போது, அந்த இடத்தில் கான்கிரீட் பெயர்ந்து பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டு, வேகமாக வரும் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர்.

எனவே, இந்த பள்ளத்தை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us